எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கையில் சமீபத்திய எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான கணக்கீடுகளைக் காட்டும் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கான இன்றைய புதிய விலை திருத்தத்திற்கு பின்னரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 334.39 ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் ஒட்டோ டீசல் ஊடாக 8.52 ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலில் 15.57 ரூபா இலாபமும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஊடாக 68.61 ரூபா மற்றும் சுப்பர் டீசலில் 20.27 ரூபா இலாபமும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.