follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுநாளை தொடக்கம் ஜூலை 3 வரையிலான மின்வெட்டு அறிவிப்பு

நாளை தொடக்கம் ஜூலை 3 வரையிலான மின்வெட்டு அறிவிப்பு

Published on

நாளை (27) தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் 1 மணி 40 நிமிடங்களும், இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்தடை அமுலாகவுள்ளது.

அத்தோடு, ஜூலை 2 மற்றும் 3அம் திகதிகளில் CC வலயங்களில் காலை 6 மணிமுதல் 8 மணிவரை 2 மணிநேரம் மின்வெட்டு அமுலாகவுள்ளதோடு, MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் தாள் தொடர்பிலும் விசாரணை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை...

யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி

பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல்...

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...