இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

279

வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களிற்கு பெற்றோல் வழங்கப்படாமையை கண்டித்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் ஊழியர்கள் இன்று (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் வழமையான பஸ் சேவைகள் இடம்பெறவில்லை.

மேலும் யாழ். மத்திய பஸ் நிலையமும் இன்று காலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் பஸ் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் அவை இன்னும் கிடைக்கபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here