follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகமல் குணரத்னவிடம் வாக்குமூலம் பதிவு

கமல் குணரத்னவிடம் வாக்குமூலம் பதிவு

Published on

மைனாகோகம, கோட்டாகோகம உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர்களான சன்ன ஜயசுமன மற்றும் டொக்டர் ரமேஷ் பத்திரன ஆகியோரிடமும் ஆணைக்குழு நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

தற்போது வரை சுமார் 30 அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான இந்த ஆணைக்குழு, ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...