follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்குள்

பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்குள்

Published on

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்புக்கு அப்பாலுள்ள சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பத்திரிகை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இன்மையால், கொழும்பின் சில பகுதிகளில், இன்றைய தினம் பத்திரிகை விநியோகிக்கப்படவில்லை என, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகை அச்சிடப்பட்ட பின்னர், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு, குறித்த நிறுவனங்களின் போக்குவரத்து சேவை ஊடாக நேரடியாக விநியோகிக்கப்படுவதுடன், அங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு தனியார் வாகனங்கள் மூலம் பத்திரிகை விநியோகிக்கப்படும்.

இந்தப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் கடந்த நாட்களில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமை நீடித்தால், அடுத்த வாரம் முதல் பத்திரிகை விநியோகப் பணிகள் முழுமையாக முடங்கும் என பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

“இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

இன்று முதல் சிறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

சுகயீன விடுப்பு அறிக்கை மூலம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...