follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவை ஆரம்பம்!

3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவை ஆரம்பம்!

Published on

ஒரு நாள் சேவையின்  ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை  முதல் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள்  முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்துக்கு நாளாந்தம் பெருமளவானோர் வருகைதந்தனர்.

இதன்காரணமாக இரண்டு சேவை முறைகளின் கீழ் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மேலும் 3 மாவட்டங்களில் கடவுச்சீட்டு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...