follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு!

தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு!

Published on

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கனேடிய நீதிமன்றம், மனுவினை நிராகரித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...