follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉலகம்அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Published on

இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூஜெர்சி மாநிலத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில ஆளுநர் ஃபில் மர்ஃபி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள். திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தத் தீவிரமான புயல் மற்றும் மழைப் பொழிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஏராளமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நியூயார்க் நகரில் மற்றும் நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...