follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Published on

இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூஜெர்சி மாநிலத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில ஆளுநர் ஃபில் மர்ஃபி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள். திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தத் தீவிரமான புயல் மற்றும் மழைப் பொழிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஏராளமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நியூயார்க் நகரில் மற்றும் நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...