follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉலகம்அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Published on

இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூஜெர்சி மாநிலத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில ஆளுநர் ஃபில் மர்ஃபி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள். திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தத் தீவிரமான புயல் மற்றும் மழைப் பொழிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஏராளமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நியூயார்க் நகரில் மற்றும் நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாபின்...

ஹமாஸ் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் – எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல்...

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக்...