follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடு19 வயது இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு!

19 வயது இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on

அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

இராணுவ பயிற்சி குழுவொன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இராணுவ சிப்பாய் மாதுரு ஓயா இராணுவ சிறப்புப் படைப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வந்தவராவார்.

அவர் அம்பகஸ்துவ தங்கமுவ பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...