follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடு19 வயது இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு!

19 வயது இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on

அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

இராணுவ பயிற்சி குழுவொன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இராணுவ சிப்பாய் மாதுரு ஓயா இராணுவ சிறப்புப் படைப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வந்தவராவார்.

அவர் அம்பகஸ்துவ தங்கமுவ பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...