ரெட்ட உட்பட மூவருக்கு பிணை

424

போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்ட எனப்படும் ரத்திது சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை 500,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் தலங்கம மற்றும் கோட்டை பிரதேசங்களில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் கடந்த 22 ஆம் திகதி மருதானை பொலிஸாரிடம் இவர்கள் ஆஜராகியிருந்தனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here