follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுக.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

Published on

எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தவுடன், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மீள ஆரம்பிக்க உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதால், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஒழுங்கமைத்தன் பின்னரே சாதாரணத் தர பரீட்சை விடைத்தாள் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியும்.

அவ்வாறின்றேல், ஆசிரியர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...