இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாலைகளில், தனியார் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பிரதேசங்களில் எரிபொருள் விநியோகிகப்படாத காரணத்தால், அதிகளவான பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கருத்து வெளியிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை, உச்சபட்ச அளவில் தங்களது பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், பஸ்கள் உரியவாறு சேவையில் ஈடுபடாமையால், இன்றைய தினமும் பயணிகள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.