follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபுதிய அரசை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும் - மகாநாயக்க தேரர்கள்

புதிய அரசை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும் – மகாநாயக்க தேரர்கள்

Published on

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் இல்லை என்றால் புதிய அரசை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதத்தின் மூலம் வலியறுத்தியுள்ளனர்.

பொது மக்களின் நலனுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றிணை வேண்டும் என்றும் அதற்கு ஜனாதிபதி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் உடன்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

10 அம்சங்கள் அடங்கிய கடிதத்தில், அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் தலைவராக ஒரு தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கட்சி சார்பற்ற இலங்கையர் ஒருவர் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை 15 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட எவரையும் சேர்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் அந்தந்த அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு வழிகாட்டவும் ஆலோசனை வழங்கவும் தேசிய சபை நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தவறான நிர்வாகத்தின் மூலம் நாட்டை அராஜகத்திற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, நட்பு நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கு முறையான பொறிமுறையைத் தயாரிக்க வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் வலியறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...