follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஜெக்சன் அன்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை!

ஜெக்சன் அன்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை!

Published on

அனுராதபுரம் தலாவ மொரகொட பிரதேசத்தின் ஏழாம் தூண் பகுதிக்கு அருகில் நேற்றிரவு நடிகர் ஜெக்சன் அன்டனி பயணித்த கெப் வண்டி காட்டு யானையுடன் மோதிய விபத்தினையடுத்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்பொழுது அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் காயமடைந்த ஜெக்சன் என்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் படப்பிடிப்பொன்றை முடித்துவிட்டு தங்குமிடத்திற்காக அனுராதபுரம் திரும்பும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...