அனுராதபுரம் தலாவ மொரகொட பிரதேசத்தின் ஏழாம் தூண் பகுதிக்கு அருகில் நேற்றிரவு நடிகர் ஜெக்சன் அன்டனி பயணித்த கெப் வண்டி காட்டு யானையுடன் மோதிய விபத்தினையடுத்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்பொழுது அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் காயமடைந்த ஜெக்சன் என்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் படப்பிடிப்பொன்றை முடித்துவிட்டு தங்குமிடத்திற்காக அனுராதபுரம் திரும்பும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.