follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜெக்சன் அன்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை!

ஜெக்சன் அன்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை!

Published on

அனுராதபுரம் தலாவ மொரகொட பிரதேசத்தின் ஏழாம் தூண் பகுதிக்கு அருகில் நேற்றிரவு நடிகர் ஜெக்சன் அன்டனி பயணித்த கெப் வண்டி காட்டு யானையுடன் மோதிய விபத்தினையடுத்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்பொழுது அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் காயமடைந்த ஜெக்சன் என்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் படப்பிடிப்பொன்றை முடித்துவிட்டு தங்குமிடத்திற்காக அனுராதபுரம் திரும்பும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...