தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு அரசாங்கத்திற்கு திறமையும், அறிவும் இல்லை. அதனால் ஆளும் தரப்பினை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகாசங்கத்தினரின் வழிகாட்டுதலின்படி விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் இலங்கையில் கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் உக்கிரமடைவதை தடுக்கமுடியாது என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வழி செய்ய வேண்டும் என அவர் குறித்த ஊடகசந்திப்பில் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.