கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடையே இன்று Zoom தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்தின்படி நாளை முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடந்த இரு வாரங்களாக வீழ்ச்சியுற்றிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை வீதத்தினை ஆராய்ந்ததன் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறைநாட்களுக்கு பதிலாக எதிர்வரும் விடுமுறைக் காலத்தினை பயன்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.