எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருள் இல்லாமல் தங்குவதைத் தடுப்பதற்காகவே டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தற்போது IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் டோக்கன்கள் வியாபாரபொருளாக மாறியுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த டோக்கன் முறையானது எரிசக்தி அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும், அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையே அது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.