அவசர தேவைக்காக விமானங்களுக்கு கொஞ்சம் எரிபொருள் வைத்துள்ளோம்!

604

விமானங்களுக்கான எரிபொருள் நிறைவடைந்துள்ளமையினால் இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவண்சந்ர தெரிவித்துள்ளார்.

எனினும் அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தேவையான விமான எரிபொருளை பெற்று தருவதற்கு கனியவள கூட்டுதாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here