மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்திடமிருந்து சுமார் 50,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி எரிபொருளை பெற எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.