follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

Published on

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுடன் இன்று(4) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம்திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக, வாரத்தில், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் தபால் நிலையங்கள் ஊடாக சேவைகளை முன்னெடுக்க தபால் திணைக்களம் கடந்த வாரம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இந்த தீர்மானத்தின் ஊடாக, சனிக்கிழமை பணியாற்றுவதன் மூலம் தமக்கும் கிடைத்துவந்த மேலதிக கொடுப்பனவு இல்லாது போவதாக தெரிவித்து, மேற்படி தீர்மானத்துக்கு எதிராக தபால் தொழிற்சங்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...