follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

Published on

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுடன் இன்று(4) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம்திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக, வாரத்தில், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் தபால் நிலையங்கள் ஊடாக சேவைகளை முன்னெடுக்க தபால் திணைக்களம் கடந்த வாரம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இந்த தீர்மானத்தின் ஊடாக, சனிக்கிழமை பணியாற்றுவதன் மூலம் தமக்கும் கிடைத்துவந்த மேலதிக கொடுப்பனவு இல்லாது போவதாக தெரிவித்து, மேற்படி தீர்மானத்துக்கு எதிராக தபால் தொழிற்சங்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தன.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...