இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
இவர்கள் ஒரு விசைப்படகுடன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.