follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டிய எதிர்க்கட்சியினர்

ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டிய எதிர்க்கட்சியினர்

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது குறித்த திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

நாட்டை இந்த நெருக்கடியான நிலையில் இருந்து முன்னெடுப்பதற்கு குறைந்தது 4 முதல் 5 வருடங்கள் தேவை என்று சுட்டிக்காட்டினார். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றம் வந்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் அமர்ந்து பிரதமரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஜே.வி.பி.யினர் ஆறு மாத காலத்தில் நாட்டை முன்னெடுக்கும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதன்போது எதிர்க்கட்சியினர் ‘கோ ஹோம் கோட்டா’ என்று கூச்சலிட ஆரம்பித்தனர்.

கூச்சலுக்கு மத்தியில் பிரதமர் உரையாற்றினார். பிரதமரின் உரையை ஜனாதிபதி தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார். உரை முடிந்தும் கூச்சல் நீடிக்க சபாநாயகர் சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...