follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசாரதிகளின் மோசடி : முச்சக்கர வண்டி பயணத்தை நிராகரிக்கும் மக்கள்

சாரதிகளின் மோசடி : முச்சக்கர வண்டி பயணத்தை நிராகரிக்கும் மக்கள்

Published on

தன்னிச்சையான கட்டண அறவீடு காரணமாக பொது மக்கள் முச்சக்கரவண்டி பாவனையில் இருந்து விலகி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

சில முச்சக்கரவண்டி சாரதிகள் மோசடியான முறையில் பொதுமக்களிடம் கட்டணங்களை அறவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி கட்டண அறவீடு தொடர்பில் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்க் கொண்டுள்ளனர். மக்கள் முச்சக்கரவண்டிகளை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

காரணம், எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் அதிக அளவில் முச்சக்கரவண்டி கட்டணங்களை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி சாரதிகள் தன்னிச்சையாக மற்றும் மோசடியான முறையில் பயணிகளிடம் அதிக அளவில் பணம் அறவிடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...