பத்தரமுல்ல – கடுவெல வீதியில் போக்குவரத்து நெரிசல்

564

எரிபொருள் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல – கடுவெல வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலங்கம டிப்போவிற்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here