follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுபுதிய கொரோனா திரிபு பரவும் அபாயம்

புதிய கொரோனா திரிபு பரவும் அபாயம்

Published on

புதிய திரிபு கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் செலுத்திக்கொள்ள முடியும்.

கொரோனா 4ஆம் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பினை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்டாலினின் எதிர்ப்பு.. ஆசிரியர் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு உடனடி கலந்துரையாடல்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான "சுபோதானி குழு அறிக்கை"க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...

பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின்...

‘ரட்ட அநுரட்ட அல்ல, ரட்ட ஐஎம்எப் இற்கு’ – சஜித்

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...