follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கை அகதிகளை மீட்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

இலங்கை அகதிகளை மீட்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

Published on

இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர பொலிஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அகதிகளாக வரும் பெரும்பாலானோர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைகளில் இறங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரையோர பொலிஸாருக்கு சொந்தமான படகுகள் தனுஷ்கோடியில் ரோந்து செல்லவும் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்கவும் தனுஷ்கோடி படகுகள் இறங்குதளத்தில் நிறுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...