follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

Published on

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே நிமல் சிறிபால டி சில்வா தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

விமான போக்குவரத்து அமைச்சு தனியார் நிறுவனமொன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் குறித்து பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதுவரையில் தனது அமைச்சுப் பதவியை நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...