follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

Published on

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே நிமல் சிறிபால டி சில்வா தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

விமான போக்குவரத்து அமைச்சு தனியார் நிறுவனமொன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் குறித்து பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதுவரையில் தனது அமைச்சுப் பதவியை நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...