கல்முனை பகுதியில் 2,160 லீற்றருக்கும் அதிக மண்ணெண்ணெய்யுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் 51 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.