மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு

404
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அதிரிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனபடி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு விகிதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

சமீபகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக அதிகரித்து வருவதையும், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் கவனித்த சபை, பாதகமான பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேலும் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை கடுமையாக்குவது அவசியம் என்று கருதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here