follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

Published on

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்தம் கொழும்பு அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளிக்கும் வகையில் மூன்று மாத காலத்திற்கு முகாமைத்துவ சேவை அதிகாரிகளை தற்காலிக அடிப்படையில் நியமிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் வசிக்கும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உத்தியோகத்தர்களை மூன்று மாத காலத்திற்கு குடிவரவு திணைக்களத்திற்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பகல் மற்றும் இரவு என இரண்டு நேர அட்டவணை முறையில் பணியாற்ற விரும்பும் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவசரத் தேவையாகக் கருதி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கூட்டுச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...