follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபணிபுறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக இ.போ.ச ஊழியர்கள் அறிவிப்பு

பணிபுறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக இ.போ.ச ஊழியர்கள் அறிவிப்பு

Published on

சேவைக்கு சமூகமளிப்பதற்காக எரிபொருளை பெற்றுத் தரவில்லை என்றால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்காக எரிபொருள் வழங்கும் முறைமையொன்றை இன்று காலை அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று மதியம் 12 மணி முதல் சேவையில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ரயில் ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்படும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...