ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மெற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜப்பானின் முன்னாள் பிரதமர் விரைவில் குணமடைய வாழ்த்துகின்ற அதே வேளையில், தங்கள் பிரார்த்தனைகள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் ஜப்பான் மக்களுடனும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
I’m shocked and saddened by the news of the shooting of former PM Shinzo Abe. Whilst wishing him a speedy recovery, our prayers are with him, his family and people of #Japan.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 8, 2022