follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது – நாலக

ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது – நாலக

Published on

ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய நெருக்கடியை ஜனாதிபதியால் தீர்க்க முடியாது. நாடாளுமன்றத்தில் எத்தனை பெரும்பான்மை என்று இன்னும் கூற முடியாது.

ஆனால், இவ்வளவு பெரிய நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் நம்பிக்கை முக்கியம். நம்பிக்கை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.

அரசாங்கம் செய்வதை மக்கள் நம்பாத வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு மக்களின் ஆதரவைப் பெற மாட்டார்கள். எனவே நாம் பேசும் அனைத்து தீர்வுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.

எனவே அந்த பெரிய மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒரு முக்கிய காரணியாக உள்ளார். எனவே அந்த காரணி இருக்கும் வரை நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது என்று நானும் கருதுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...