follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு‘ஜனாதிபதி பதவி விலகியதும் மாளிகைகளை பாதுகாப்பு தரப்புகளிடம் கையளிக்கவும்’

‘ஜனாதிபதி பதவி விலகியதும் மாளிகைகளை பாதுகாப்பு தரப்புகளிடம் கையளிக்கவும்’

Published on

ஜனாதிபதி நாளை பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்வதை காலிமுகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கான வெற்றியாக கருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய வெற்றி காரணமாக தங்கள் கட்டுப்பாட்டின் உள்ள கட்டிடங்களை கையளிக்கவேண்டிய பொறுப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு உள்ளது இது தேசிய பாதுகாப்பு விவகாரம் எனவும் ஓமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் அந்த கட்டிடங்களை படையினரிடம் ஒப்படைக்காவிட்டால் அதனால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் பல அரசியல் சதிமுயற்சிகளிற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...