follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு!

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாலைதீவின் தலைநகரான மாலேவை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் சென்றடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலையத்தில் இருந்து இலங்கை மக்கள் கோட்டாபயவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...