follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபோராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

Published on

அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மேலும் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

திருட்டு மற்றும் சேதம் ஏற்பட்டால் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் உள்ள பல தொல்பொருட்கள் மற்றும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மூன்று அரச கட்டிடங்களை தாக்கி ஆக்கிரமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...