follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபோராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

Published on

அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மேலும் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

திருட்டு மற்றும் சேதம் ஏற்பட்டால் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் உள்ள பல தொல்பொருட்கள் மற்றும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மூன்று அரச கட்டிடங்களை தாக்கி ஆக்கிரமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...