follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபோராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

Published on

அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மேலும் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

திருட்டு மற்றும் சேதம் ஏற்பட்டால் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் உள்ள பல தொல்பொருட்கள் மற்றும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மூன்று அரச கட்டிடங்களை தாக்கி ஆக்கிரமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...