follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபோராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

Published on

அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மேலும் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

திருட்டு மற்றும் சேதம் ஏற்பட்டால் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் உள்ள பல தொல்பொருட்கள் மற்றும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மூன்று அரச கட்டிடங்களை தாக்கி ஆக்கிரமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...