இலங்கை நாட்டின் நிலைமை மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்ற வகையில், இந்த நேரத்தில் கொழும்பிற்கு பொருளாதார ரீதியாக உதவக்கூடிய வழிகளில் புது டெல்லி கவனத்தை செலுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர் இலங்கையில் நிலைமை மிகவும் உணர்திறன் மற்றும் சிக்கலானது. இலங்கை மக்கள் எமது அண்டை வீட்டாராக இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தியாவின் அர்ப்பணிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் நட்பான மனிதர்கள். இந்த நட்பின் உணர்திறன் காரணமாகவே அவர்கள் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவ விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அதற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் இந்தியாவின் கவனம் உள்ளது.
ஏனைய விடயங்களில் இந்தியா தலையிடவில்லை. அந்தக் காரணிகளைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை. எனவே சமூக ஊடகங்களில் வரும் அனைத்திற்கும் தம்மால் பதிலளிக்க முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.