follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுரணில் விக்ரமசிங்கவிடம் பதவி விலகுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

ரணில் விக்ரமசிங்கவிடம் பதவி விலகுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

Published on

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உடனடியாக பதவி விலக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் முதலாவதாக கோரப்பட்டுள்ளது.

ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுகின்ற போது, ஜனாதிபதி பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் ரணில் விக்ரமசிங்கவிடம்  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை அடக்குமுறைக்கும் வன்முறைகளுக்கும் பயன்படுத்த வேண்டாம் என மூன்றாவது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பதவி விலகுவது குறித்து சிந்திக்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கை மூலம் பதில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலிருந்து தப்பிச்சென்ற இழிவான ஜனாதிபதியால், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...