follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதபால் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

தபால் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

Published on

அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால்மா அதிபர் ரன்ஞித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து தபால் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுபாடு காரணமாக உள்ளக தபால் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரன்ஞித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...