காலி முகத்திடலில் போராட்டம் தொடங்கி இன்றோடு 100 நாட்கள் நிறைவு

697

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது.

இதேவேளை, போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வும் நேற்று இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

இதன்போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here