எரிபொருள் நிலையத்தில் மோதல் : 5 பேர் காயம்!

704

நிட்டம்புவ – கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (18) காலை வரிசையில் நின்றவர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையின்போது, கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில், 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையிலும் மேலும் இருவர் கம்பஹா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here