இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

415

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ரவி சாஸ்திரியுடன், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் மற்றும் நித்தின் பட்டேல் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது பரிசோதனை முடிவு வெளியிடப்படும் வரை அவர்கள் விருந்தகங்களில் தங்கிருப்பர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here