follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுபாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் - என்.கே ஜயவர்த்தன

பாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் – என்.கே ஜயவர்த்தன

Published on

டீசல், எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுமானால் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

120 ரூபாவிற்கு காணப்பட்ட டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 460 ரூபாவாக அதிகரித்து தற்போது அதில் 20 ரூபாவை அரசாங்கம் குறைத்துள்ளது. இது ஒரு நகைப்புக்குரிய விடயமாகும்.

எனவே, அதிகரிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன் விலை, கோதுமை மா மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைக்குமாறு தாம் அரசாங்கத்தை கோருகிறோம்.

இதுதவிர, மண்ணெண்ணெயை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 50 ரூபாவாலும், ஏனைய வெதுப்பக உற்பத்தி உணவு பண்டங்களின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...