நீண்ட இடைவௌியின் பின்னர் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை அண்மித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் தேசிய எரிபொருள் அட்டைகள் ஒழுங்கமைக்கப்பட்டதன் பின்னரே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பொலன்னறுவை – கதுருவெல கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.