follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஇந்தியாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான அறிவிப்பு

இந்தியாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான அறிவிப்பு

Published on

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது பிற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் இதனை அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு தலையீடு செய்வது என்பது தொடர்பில் செயற்படுவதற்கு இந்தப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், மும்பையில் உள்ள துணை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் ஆகியவை இந்தப் பதிவுக்காக இலவச இணைய வசதிகளை வழங்கியுள்ளன.

மேலும், இலங்கை மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் மாநிலத்திற்கு ஏற்ப தங்களது விபரங்களை உள்ளிட வேண்டும்.

குறித்த அறிக்கையின் ஊடாக உயர்ஸ்தானிகராலயம் நாட்டில் உள்ள அவர்களது பெற்றோரிடம் இது தொடர்பில் தமது பிள்ளைகளுக்கு அறிவிக்குமாறு“ கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான பதிவுகளை https://www.slhcindia.org/ மற்றும் https://www.sldhcchennai.org/ என்ற இணையதளங்கள் மூலம் மேற்கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...