ரயில் பயணச்சீட்டிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்.
பயணச்சீட்டுகளை அச்சிடுவதற்கான பணியாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறியுள்ளார்.