follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுபாராளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Published on

பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்காக இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும்  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமங்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரும் உரை நிகழ்த்தினர்.

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...